தேவையான பொருட்கள் :-
- முந்திரிப்பருப்பு - 150 கிராம்,
- பொட்டுக்கடலை - 3 கப்,
- அரிசிமாவு - ஒரு கப்,
- பச்சை மிளகாய் - 5,
- இஞ்சி - சிறு துண்டு,
- வெங்காயம் - 2,
- பெருங்காயம் - சிறிது,
- கறிவேப்பிலை - சிறிது,
- கொத்தமல்லி - சிறிது,
- நெய் - ஒரு மேசைக்கரண்டி,
- எண்ணெய் - தேவைக்கேற்ப,
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :-
- பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து இரண்டு கப் அளவிற்கு மாவு எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதனுடன் அரிசி, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- நெய்யை உருக்கி ஊற்றி, சிறிது தண்ணீரும் தெளித்து (தண்ணீர் அதிகம் விடக்கூடாது) நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உடைத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் கொதித்தவுடன், அதில் மாவினை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- வெங்காயம் சேர்க்காமலும் இதனை செய்யலாம். சுவையான முந்திரி பக்கோடா ரெடி.
0 comments:
Post a Comment