முந்திரி பக்கோடா - 2

Posted in Saturday, November 26, 2011
by Kolipaiyan

தேவையான பொருட்கள் :-

  • முந்திரிப்பருப்பு - 150 கிராம்,
  • பொட்டுக்கடலை - 3 கப்,
  • அரிசிமாவு - ஒரு கப்,
  • பச்சை மிளகாய் - 5,
  • இஞ்சி - சிறு துண்டு,
  • வெங்காயம் - 2,
  • பெருங்காயம் - சிறிது,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • கொத்தமல்லி - சிறிது,
  • நெய் - ஒரு மேசைக்கரண்டி,
  • எண்ணெய் - தேவைக்கேற்ப,
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :-

  • பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து இரண்டு கப் அளவிற்கு மாவு எடுத்துக் கொள்ளவும்.

  • பிறகு அதனுடன் அரிசி, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

  • நெய்யை உருக்கி ஊற்றி, சிறிது தண்ணீரும் தெளித்து (தண்ணீர் அதிகம் விடக்கூடாது) நன்கு பிசைந்து கொள்ளவும்.

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உடைத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டுக் கொதித்தவுடன், அதில் மாவினை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  • வெங்காயம் சேர்க்காமலும் இதனை செய்யலாம். சுவையான முந்திரி பக்கோடா ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!