மெது பக்கோடா

Posted in Saturday, November 26, 2011
by Kolipaiyan

தேவையான பொருட்கள் :-

  • கடலை மாவு - 2 கப்,
  • அரிசி மாவு - 3/4 கப்,
  • பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன் அல்லது,
  • சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்,
  • வெண்ணை அல்லது,
  • வனஸ்பதி - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை,
  • வெங்காயம் - 1,
  • பச்சை மிளகாய் - 3 அல்லது 4,
  • இஞ்சி - ஒரு சிறு துண்டு,
  • முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்),
  • உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு,
  • எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :-

  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  • ஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணை அல்லது வனஸ்பதியைப் போட்டு அத்துடன் பேக்கிங் பவுடர் அல்லது சமையல் சோடாவைச் சேர்த்து, நுரைத்து வரும் வரை விரல்களால் நன்றாகத் தேய்த்து விடவும்.

  • பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் ஒரு கை தண்ணீரைச் சேர்த்துக் கலக்கி விடவும். அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி ஆகியவற்றைப் போட்டுக் கலக்கவும். கடைசியில் வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து விடவும்.

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். கலந்து வைத்துள்ள மாவின் ஒரு பகுதியில் சிறிது நீரைத் தெளித்து இளகலாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில், சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும்.

  • எல்லா மாவையும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து செய்யவும். அப்படி செய்வதால், மாவு புளித்து போகாமல், பக்கோடா அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும்.

குறிப்பு :-

தேங்காய்ச்சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!