தேவையான பொருட்கள் :-
- பெரிய வெங்காயம் - 1/4 கிலோ,
- கடலை மாவு - 100 கிராம்,
- அரிசி மாவு - 50 கிராம்,
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி,
- மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி,
- கொத்தமல்லித்தழை - 1 கொத்து,
- எண்ணெய் - 1/4 லிட்டர்,
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :-
- பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவும்.
- ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிசறிக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்.
- மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும். சுவையான வெங்காய பக்கோடா ரெடி.
குறிப்பு :-
வெங்காயம் முடிந்தவரை பெரிதாக இருக்க வேண்டும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
0 comments:
Post a Comment