தேவையான பொருட்கள் :-
- நிலக்கடலை (வறுக்காதது) - 200 கிராம்,
- கடலை மாவு - 1 1/2 கோப்பை,
- அரிசி மாவு - 1/4 கோப்பை,
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
- பெருங்காயத்தூள் - சிறிதளவு,
- இஞ்சி - சிறிதளவு,
- பூண்டு - 5 பல்,
- எண்ணெய் - தேவையான அளவு,
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :-
- இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல்நீக்கி கழுவி தனியே விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் தெளித்து நிலக்கடலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டி இல்லாமல் பிசறவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், பிசறிய நிலக்கடலை கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான நிலக்கடலை பக்கோடா ரெடி.
0 comments:
Post a Comment